இந்த காட்டு வாழ்க்கையில்
ஆடுகளாக நாம்,
ஒரு காரியத்தை ஒதுக்க
ஓராயிரம் காரணங்கள்;
புல்லை மேய்ந்த நம்
இரைப்பை கசாப்புகடையில்,
நம்பிக்கையை கேடயமாக்கி
நீ மந்தையிலிருந்து பயணி;
வேலியைத் தாண்டினால்
நாம் பயிறை மேயலாம்,
மனச்சிறையை உடைத்தெறி
சிங்கங்களை ஆள்வோம்!
ஐயோ!! கனவு கலைந்தது,
கசிந்தது என் இரத்தம்!
எந்த கசாப்புகடையில்?
நான் கத்தி முனையில்!!!
லட்சியத்துடன் வேட்டையாடும்
புலியல்ல நாம்.
உண்மையில், பசிக்கு மேயும்
வெறும் ஆடுகள் தானே;
நமக்கு இந்த புல்லே போதும்...
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.