இயற்கையோ எங்களுக்கு
கொடுத்தது, ஒரு முத்தம்!
நாங்களோ இயற்கையோடு
நடத்தினோம், ஒரு யுத்தம்!!
நம்பிக்கை துரோகிகளாக
இயற்கையை வென்றோம்;
வனவிலங்குகள் அத்துமீறல்
என்று அவற்றையும் கொன்றோம்;
நவீனமாக மாசுபடுத்திய காற்றே
எங்களுக்கு உயிர்குடி விஷமானது,
நாங்கள் வெட்டிய மரங்களின்
இரத்தம் செக்கச்சிவந்த ஆறானது.
தோல் போர்த்தி உடல் மெலிந்த
நாங்கள், நடைபிணங்கள்.
இன்னும் மனித வேட்டையில்
இயற்கையின் ஆன்மா...
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.