Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

(சுடு)காடு


இயற்கையோ எங்களுக்கு
கொடுத்தது, ஒரு முத்தம்!
நாங்களோ இயற்கையோடு
நடத்தினோம், ஒரு யுத்தம்!!

நம்பிக்கை துரோகிகளாக
இயற்கையை வென்றோம்;
வனவிலங்குகள் அத்துமீறல்
என்று அவற்றையும் கொன்றோம்;

நவீனமாக மாசுபடுத்திய காற்றே
எங்களுக்கு உயிர்குடி விஷமானது,
நாங்கள் வெட்டிய மரங்களின்
இரத்தம் செக்கச்சிவந்த ஆறானது.

தோல் போர்த்தி உடல் மெலிந்த
நாங்கள், நடைபிணங்கள்.
இன்னும் மனித வேட்டையில்
இயற்கையின் ஆன்மா...

No comments:

Post a Comment

Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.