அதோ! அவள் நிலத்தை
நிழலென வருடி வருகிறாள்,
குளிர்ந்த நிலவான முகத்தில்
இரு தீப்பந்தங்கள்--- விழிகள்;
அந்த செவ்விதழ்கள் என்னை
மட்டுமே அடைத்துப் பூட்டிய சிறை;
அவளின் பற்கள் கண்ணாடித்
துண்டுகள், என் இதயத்தை கிழித்தன.
இதயத் தழும்புகளை மறைக்க,
காதலை காய்ச்சி ஊற்றினேன்;
என் கொதித்து துடிக்கும் இதயம்
அவளது ஒரே பார்வையில் சரணம்.
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.