கரைந்த காலத்தின்
எண்ணக் கரைசல்கள்,
கடற்கரையில் பொறுக்கிய
வெளுத்த பூமிகள்
என் பிஞ்சு கைகளில்...
தரையில் நடந்து
மனதில் மிதந்து,
நீந்தாக் கடலலைகளில்
சிக்கி மீண்ட
ஆனந்த மனச்சோர்வுடன்
உருண்டு புரளும் மணலில்
நான் கட்டி சரிந்த
மனக்கோட்டை;
அவற்றை நினைத்து
இன்னும் 'துடிக்கிறது'
என் முதிர்ந்த இதயம்,
கண்களிலிருந்து நீர்வீழ்ச்சி;
மாற்றுப்பாதையில்
அக்கடல்நீரே!
நான் உயிருடனிருப்பதன் சாட்சி.