விண்ணிலிருந்து மண்ணில் பிறந்த
தேவதைகளுக்கு, கள்ளிப்பால்
அபிஷேகம்--- உடனடி வீடு திரும்பல்!
காட்டுமிராண்டித்தனமான கலாச்சார
சந்தையில் இவளொரு சுமைதாங்கி,
இவளுக்கு மட்டுமே கற்பும் காப்பும்;
எழுதித் தீர்த்தாலும் வலிகளைச் சுமக்கும்
சொற்களுக்கு எடை கூடுவதில்லை...
எக்காலத்தில் இவளுக்கு விடியும்?
இவளின் ஓங்காத கைக்குப் பூட்டிய
சங்கிலியை உடைத்தெறிய இவளுக்குப்
பிறப்பாள், இன்னொரு இலக்கியப் பெண்!!
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.