Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

திசைப்பூனை


பசிப் பிணியால் துடித்த
வறுமைப்பூனை,
நடக்கும் எத்திசைக்கும்
கெட்ட சகுனம்;

தின்று கொழுத்த
மனிதனின் தூக்கம்,
மதியற்று விதியை நம்பும்
ராசியான குருடனிவன்;

உற்சாகப்பூனை
அங்கு உணவு தேட,
உறங்கிய மடையன்
ஊர் சுற்ற எழுந்தான்.

பரிதாபப்பூனை
பசியால் அலைய,
பைத்தியகார மனிதன்
தெருவில் நடந்தான்;

அப்பாயும் பூனை
"குருவிக்கு புலியாக",
குறுக்கே வந்த முட்டாளுக்குக்
கெட்ட சகுனமாம்!!

வீடு திரும்பிய சோம்பேறி
இவனுக்குத் தெரியாது,
அது தன் உழைப்பால்
சகுனமற்ற திசைப்பூனை...

No comments:

Post a Comment

Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.