பசிப் பிணியால் துடித்த
வறுமைப்பூனை,
நடக்கும் எத்திசைக்கும்
கெட்ட சகுனம்;
தின்று கொழுத்த
மனிதனின் தூக்கம்,
மதியற்று விதியை நம்பும்
ராசியான குருடனிவன்;
உற்சாகப்பூனை
அங்கு உணவு தேட,
உறங்கிய மடையன்
ஊர் சுற்ற எழுந்தான்.
பரிதாபப்பூனை
பசியால் அலைய,
பைத்தியகார மனிதன்
தெருவில் நடந்தான்;
அப்பாயும் பூனை
"குருவிக்கு புலியாக",
குறுக்கே வந்த முட்டாளுக்குக்
கெட்ட சகுனமாம்!!
வீடு திரும்பிய சோம்பேறி
இவனுக்குத் தெரியாது,
அது தன் உழைப்பால்
சகுனமற்ற திசைப்பூனை...
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.