காதில் மழைச் சாரல்,
அது காதல் மழையின் தூறல்;
நெஞ்சத்தை வருடும் இசை,
அடர்ந்த காட்டிற்குள் நுழையும் திசை;
அங்கு ஏதோ ஒரு கண்ணன்!
என் காவியத்தில் அவன் மன்னன்;
மயிலிறகின் வண்ணமுடைய நிலம்,
அதைப்பார்த்து உறைந்தது என் நலம்;
அவன் உதட்டில் தேங்கியுள்ள அன்பு,
கிழித்தது என் இதயத்தை காதல் அம்பு;
ஆழ்மனதை கவ்வியிழுக்கும் நீலக்கண்,
நானோ பருவமடைந்த ஒரு வெகுளிபெண்!!
இசை படர்ந்த அழகிய வனம்,
சொக்கி அலையும் நீண்ட வானம்;
அக்காட்சியை சுமந்து தவிக்கும் என் விழி,
கசிந்த இசையாக தெய்வத்தின் மொழி;
திடீரென்று ஒலியை மிஞ்சிய ஒளி,
மறைந்த அவனால் எனக்கு கண்ணீர்த்துளி;
உறக்கம் கலைந்து வாடிய என் சூழல்,
மீண்டும்!!! அது யார் வாசித்த புல்லாங்குழல்?
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.