நிற்காத ஓட்டம் என்பதே வாழ்க்கை,
இந்த சாபத்தை வரமளித்தது இயற்கை!
மனிதனுக்கு நானும் ஒரு வாகனம்,
உண்மையில் நானோ--- வெறும் நடைபிணம்;
குருட்டு உலகத்தில் நிற வேறுபாடு,
யாருக்கும் கேட்காது என் கூப்பாடு;
வேகத்தில் காலத்தைக் கடந்தவன்,
முதலாளியை முதுகில் சுமந்தவன்;
சதுரங்கத்தில் மட்டுமே மகத்துவம்,
வெண்மைக்கும் கருமைக்கும் சமத்துவம்!!
முதிர்ந்தாலும் எனக்கு வராது நரை,
நானோ அரசனை வெட்டும் கருங்குதிரை...
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.