Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

கருங்குதிரை



நிற்காத ஓட்டம் என்பதே வாழ்க்கை,
இந்த சாபத்தை வரமளித்தது இயற்கை!
மனிதனுக்கு நானும் ஒரு வாகனம்,
உண்மையில் நானோ--- வெறும் நடைபிணம்;

குருட்டு உலகத்தில் நிற வேறுபாடு,
யாருக்கும் கேட்காது என் கூப்பாடு;
வேகத்தில் காலத்தைக் கடந்தவன்,
முதலாளியை முதுகில் சுமந்தவன்;

சதுரங்கத்தில் மட்டுமே மகத்துவம்,
வெண்மைக்கும் கருமைக்கும் சமத்துவம்!!
முதிர்ந்தாலும் எனக்கு வராது நரை,
நானோ அரசனை வெட்டும் கருங்குதிரை...

No comments:

Post a Comment

Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.