"உங்களால் சொற்களை காதலித்து புத்தகங்களை புணர முடிந்தால், நூலகமும் 'அந்தப்புரம்' தான்!"
Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,
Monday, March 16, 2020
Friday, March 13, 2020
பாதை
"சொர்க்கத்திற்கான பூட்டிய கதவைக் கண்டேன், என் கடின உழைப்பால் சாவி கிடைத்தது. சொர்க்க கதவை உற்சாகமாய் திறந்தேன், திறந்ததும் திடுக்கிட்டேன். ஏனெனில் அது நரகத்திற்கான பாதை!"
இலக்கியம் உணர்த்தும் உண்மை
" 'பிறரின் வாழ்க்கை நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால் தான், நம் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதை ரகசியமாக உணர்த்துகிறது இலக்கியம்."
சாதனைச் சிற்பி
" 'சிற்பம் செதுக்குதல்' என்ற ஒரே கலையினால்
கண்ணனையும் வடிவமைக்கலாம்
கம்சனையும் வடிவமைக்கலாம்.
அதற்கு சிற்பி, நாம் என்ன வடிவமைக்க போகிறோம்
என்பதை முன்பே முடிவு செய்திருக்க வேண்டும்."
கண்ணனையும் வடிவமைக்கலாம்
கம்சனையும் வடிவமைக்கலாம்.
அதற்கு சிற்பி, நாம் என்ன வடிவமைக்க போகிறோம்
என்பதை முன்பே முடிவு செய்திருக்க வேண்டும்."
யார் ஆசிரியர்?
"தன் மாணவர்களை தான் வெற்றி பெற வேண்டும் என்பவன் 'கலைஞன்', தான் தோற்றாலும் தன் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பவன் 'ஆசிரியர்'."
அழகிய முகம்
"அழகிய மனம் உள்ளவர்களுக்கு,
அழகிய முகம் அவசியமில்லை.
அழகிய மனம் அற்றவர்களுக்குத் தான்,
அழகிய முகம் தேவைப்படுகிறது."
அழகிய முகம் அவசியமில்லை.
அழகிய மனம் அற்றவர்களுக்குத் தான்,
அழகிய முகம் தேவைப்படுகிறது."
மாற்றம் வேண்டும்
மாற்றம் வேண்டும்! மாற்றம் வேண்டும்!!
(ஏ)மாற்றம் மாறிட, மாற்றம் வேண்டும்!
சாதி சமய சலசலப்பின்றி சாந்தமாய் உலகம் மாறிட, சமத்துவமான மாற்றம் வேண்டும்!
அரசியல்வாதிகள் அன்புடன் உழைத்திட,
அரசியல் பூசல்கள் மறைந்திடும் மாற்றம் வேண்டும்!
புதுமைப் பெண்கள் இரவில் இடம்பெயர,
ஆண்களின் அணுவிலும் மாற்றம் வேண்டும்!
கல்வியளித்திட மனிதம் வளர்த்திட,
இயந்திர ஆசிரியர்களிடமும் மாற்றம் வேண்டும்!
பழமையைப் போற்றிட புதுமையைப் பெருக்கிட,
மக்கள் மனதிலும் மாற்றம் வேண்டும்!
கற்களை வைத்து கடவுளை படைத்திடும்,
சிற்பியின் கலையிலும் மாற்றம் வேண்டும்!
சொற்களை இணைத்திட உணர்ச்சிகள் ஊட்டிட,
கவிஞனின் சிந்தனையிலும் மாற்றம் வேண்டும்!
ஆஹா! மாற்றம் வந்தது, மாற்றம் வந்தது!!
நாட்காட்டியில் மட்டுமே மாற்றம் வந்தது!!!
பிறந்தது குழப்பம், 2020!
மாற்றம் வேண்டும்! மாற்றம் வேண்டும்!!
(ஏ)மாற்றம் மாறிட மாற்றம் வேண்டும்!
வாழ்க பாரதம்! வந்தேமாதரம்!!
(ஏ)மாற்றம் மாறிட, மாற்றம் வேண்டும்!
சாதி சமய சலசலப்பின்றி சாந்தமாய் உலகம் மாறிட, சமத்துவமான மாற்றம் வேண்டும்!
அரசியல்வாதிகள் அன்புடன் உழைத்திட,
அரசியல் பூசல்கள் மறைந்திடும் மாற்றம் வேண்டும்!
புதுமைப் பெண்கள் இரவில் இடம்பெயர,
ஆண்களின் அணுவிலும் மாற்றம் வேண்டும்!
கல்வியளித்திட மனிதம் வளர்த்திட,
இயந்திர ஆசிரியர்களிடமும் மாற்றம் வேண்டும்!
பழமையைப் போற்றிட புதுமையைப் பெருக்கிட,
மக்கள் மனதிலும் மாற்றம் வேண்டும்!
கற்களை வைத்து கடவுளை படைத்திடும்,
சிற்பியின் கலையிலும் மாற்றம் வேண்டும்!
சொற்களை இணைத்திட உணர்ச்சிகள் ஊட்டிட,
கவிஞனின் சிந்தனையிலும் மாற்றம் வேண்டும்!
ஆஹா! மாற்றம் வந்தது, மாற்றம் வந்தது!!
நாட்காட்டியில் மட்டுமே மாற்றம் வந்தது!!!
பிறந்தது குழப்பம், 2020!
மாற்றம் வேண்டும்! மாற்றம் வேண்டும்!!
(ஏ)மாற்றம் மாறிட மாற்றம் வேண்டும்!
வாழ்க பாரதம்! வந்தேமாதரம்!!
ஒரு சாதாரண ஆத்மா
"நான் மனிதன் என்று கூறுவதே ஒரு வகையில் பாகுபாடு தான். ஏனெனில் நான்- மிருகங்கள், செடிகள் மற்றும் பூச்சிகளுக்கு நிகரான, 'ஒரு சாதாரண ஆத்மா!' "
முப்பிழைகள்
"சொற்பிழையும் எழுத்துப்பிழையும் வரலாம். ஆனால் வாக்கியப்பிழை மட்டும் வரவே கூடாது, வாழ்க்கையில்!"
நண்பனாக
"நீ வெற்றி பெற்றால் உனக்கு கைதட்ட ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் நீ தோற்றாலும் உனக்காக கைதட்ட நான் இருக்கிறேன், ஒரு உண்மையான நண்பனாக!"
கண்ணோட்டம்
"இரவில் சுற்றி பரவியிருக்கும் அசுர இருளைக் கண்டு அஞ்சுவதும் வான்வெளியில் துள்ளி விளையாடும் வின்மீன்களைக் கண்டு உள்ளம் நெகிழ்வதும் பார்ப்பவரின் கண்ணோட்டத்தில் தான் உள்ளது."
ஆளுமைத்திறன்
என் கண்ணோட்டத்தில், பிடித்த ஒரு செயலையும் பிடிக்காத ஒரு செயலையும் ஒரே அளவு ஈடுபாட்டுடன் செய்பவரே 'ஆளுமைத்திறன் மிக்கவர்!' "
நழுவிச் செய்த கொலை
"நம் வாயிலிருந்து வரும் வன்மையான வார்த்தை, நாம் காய் வெட்ட வைத்திருக்கும் கத்தி நம் கையில் இருந்து நழுவிச் சென்று நம் நண்பனை குத்திய கொலையைப் போன்றது."
மனிதம்
"நான் ஒரு மனிதாபிமானி!
மனிதர்களை கட்டாயமாக ஜாதி, மதம், மொழி, உருவம், நிறம், நடத்தை மற்றும் இன வேறுபாடின்றி காதலித்தே தீரவேண்டும் என்று வலியுறுத்துகிறது 'மனிதம்'."
மனிதர்களை கட்டாயமாக ஜாதி, மதம், மொழி, உருவம், நிறம், நடத்தை மற்றும் இன வேறுபாடின்றி காதலித்தே தீரவேண்டும் என்று வலியுறுத்துகிறது 'மனிதம்'."
வாழ்க்கையின் நோக்கம்
"நீண்டநாள் உயிர் வாழ்தல் என்பது வாழ்க்கையின் நோக்கமாய் இருத்தல் கூடாது, மகிழ்ச்சியாக வாழ்தல் அல்லது சாதனை புரிதல் - இதில் ஒன்றுதான் வாழ்க்கையின் நோக்கமாய் இருத்தல் வேண்டும்."
தோல்வி
"வெற்றி பெறுவது யாராக இருந்தாலும் சரி, கொண்டாடுவது நாமாக இருக்க வேண்டும். தோல்வியும் கொண்டாடப்படும் தகுதியுடையது, நம் முயற்சி அதனுள் இருப்பதனால்."
வழிகாட்டி
"வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் புத்தகம் என்னும் காலப்பயண இயந்திரத்தை இயக்கி, பல காலங்கள் கடந்து நம்மை கதைக்குள் அழைத்துச் சென்று, கதாபாத்திரங்களுக்கு இடையில் நாம் தொலைந்து விடாமல் வழிநடத்தும் சுற்றுலா 'வழிகாட்டி!' "
வெற்றி
"உளவியல் ரீதியாக வெற்றி என்பது ஒருவரின் திறமையால் கிடைக்காது, அவரின் நடத்தை சுற்றுப்புறத்தால் வலுவூட்டப்பட்டதின் விளைவே 'வெற்றி!' "
முயற்சி
"அதிர்ஷ்டத்திற்கும் முயற்சிக்கும் ஒரே ஒரு வேறுபாடு தான். முதன்முறையாக நீ வெற்றி பெற்றால், அது உன் அதிர்ஷ்டம்! இரண்டாம் முறையும் நீயே வெற்றி பெற்றால், அதில் பளிச்சிடுவது உன் முயற்சி!!"
ஒரு செருப்படி
"அவளின் சிரிப்பு என்னை செருப்பால் அடித்ததைப் போன்றுள்ளது.
அதனால் தான், நான் மீண்டும் கேட்டேன் 'ஒரு செருப்படி!' "
அதனால் தான், நான் மீண்டும் கேட்டேன் 'ஒரு செருப்படி!' "
நீ நீயாக வாழ்
"உன்னை இந்த உலகத்திற்காக ஒருபோதும் மாற்றிக்கொள்ளாதே, அப்படி ஒரு நாள் இந்த உலகத்திற்கு உன் உதவி தேவைப்பட்டால் நீ எப்படியும் தேர்ந்தெடுக்கப்படுவாய். எனவே, உனக்காக வாழ்! நீ நீயாக வாழ்!!"
தற்கொலை
"என்னை நேசிக்க மனமில்லாதவருக்கும் நேரமில்லாதவருக்கும் நான் தக்கசமயத்தில் உதவி செய்தால், அது தற்கொலைக்குச் சமம்!"
சமூகவிரோதிகள்
"சமூகவாதிகளே தங்களின் மென்மையான குணத்தில் விரிசல் ஏற்பட்டு, கசப்பான நாட்களினால் காயம்பட்டு, சமூகவிரோதிகளாக மாறுகின்றனர்."
Thursday, March 12, 2020
கல்விக்கு பரிசு
தேர்வறையிலுள்ள ஆசிரியருக்கு,
நான் எதாவது எழுதலாம் என்று நினைக்கும் போது, 'என் பேனா முனையில்' வரும் எழுத்துக்கள் 'குத்தி உங்கள் நெஞ்சம் கிழிந்துவிடுமோ?' என்ற எண்ணத்தில் வெள்ளை காகிதங்களையே நான் தருகிறேன், உங்களின் கல்விக்கு பரிசாய்!!!
நான் எதாவது எழுதலாம் என்று நினைக்கும் போது, 'என் பேனா முனையில்' வரும் எழுத்துக்கள் 'குத்தி உங்கள் நெஞ்சம் கிழிந்துவிடுமோ?' என்ற எண்ணத்தில் வெள்ளை காகிதங்களையே நான் தருகிறேன், உங்களின் கல்விக்கு பரிசாய்!!!
துரோகம்
"கண்ணை நீ நம்பினால், முதல் குருடன் நீ தான்! காதை நீ நம்பினால், முதல் செவிடன் நீ தான்! ஒழுக்கத்தை விட இரக்கம் வலியது, அழகிய இவ்வுலகில். இறைவன் கொடுத்த வாழ்க்கையை நீ இரசித்து வாழவில்லை என்றால், அது நீ அவருக்கு செய்யும் துரோகம்."
கௌரவம்
"அடுத்தவரின் உழைப்பினால் நான் அடையும் ஒரு வெற்றியை காட்டிலும், என் உழைப்பினால் நான் அடைந்த 1000 தோல்விகளே எனக்கு 'கௌரவம்'."
சக்தி
"நீ முடியும்வரை உன் எல்லா உணர்வுகளையும் அடக்கிய பின்பும் கூட,
சீரிப்பாய்ந்து வரும் தனி உணர்வே,
உன் வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி!!!"
சீரிப்பாய்ந்து வரும் தனி உணர்வே,
உன் வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி!!!"
Tuesday, March 10, 2020
டிஜிட்டல் கல்வெட்டு
"ஒரு கூட்டம் என் எழுத்துக்களின் வடிவத்தை பார்த்து 'கல்வெட்டு' என்றது.
அதனால் தான், நான் 'டிஜிட்டல் கல்வெட்டு'களை படைக்க முயல்கிறேன்."
அதனால் தான், நான் 'டிஜிட்டல் கல்வெட்டு'களை படைக்க முயல்கிறேன்."
Subscribe to:
Posts (Atom)