இம்மண்ணில் யாரோ இறந்த
அறிஞர்களின் விதையில்,
தவறி முளைத்த கரடுமுரடான
"பா"றைகளாக நாம்!
கல்வியாகிய கணமான
உளியெடுத்து, நம்மை நாமே
ஒரு மிகத் தரமான சிற்பமாகச்
செதுக்கிக் கொண்டிருக்க;
கழி(கரை)ந்து விழும் கற்களுடன்
பிடியின் அதிக (மன)அழுத்தத்தால்,
மனிதநேயமும் உருண்டோடுகிறது
ஏதோ அ"நா"வசிய உறுப்பாக...
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.