ஐயோ, இது கொலைகள்
நிறைந்த வாழ்க்கையடா;
கசாப்புகடைக்கு ஆட்டை
விற்றவனுக்கு, தாய்ப்பாசம்!
பெற்ற ஆடு கைவிட்ட
குட்டியைச் சுமந்தவன்,
துள்ளிச் சென்ற குட்டியின்
பின் அயராது ஓடியவன்;
அக்குட்டி வளர்ந்து ஆடாக
இவனுக்கும் வெள்ளி நரைமுடி,
முதுமையில் பணப்பசி---
ஆட்டை அறுக்க விற்றான்.
அன்றிரவே பிறந்தது ஒளி,
தேவலோகத்தில் ஒரு ஆடு;
மனசாட்சிப்படி இவனுக்கு
தினமும் "தீ"ராத் தீக்குளிப்பு...
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.