Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

தீக்குளிப்பு



ஐயோ, இது கொலைகள்
நிறைந்த வாழ்க்கையடா;
கசாப்புகடைக்கு ஆட்டை
விற்றவனுக்கு, தாய்ப்பாசம்!

பெற்ற ஆடு கைவிட்ட
குட்டியைச் சுமந்தவன்,
துள்ளிச் சென்ற குட்டியின்
பின் அயராது ஓடியவன்;

அக்குட்டி வளர்ந்து ஆடாக
இவனுக்கும் வெள்ளி நரைமுடி,
முதுமையில் பணப்பசி---
ஆட்டை அறுக்க விற்றான்.

அன்றிரவே பிறந்தது ஒளி,
தேவலோகத்தில் ஒரு ஆடு;
மனசாட்சிப்படி இவனுக்கு
தினமும் "தீ"ராத் தீக்குளிப்பு...

No comments:

Post a Comment

Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.