Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

கூழாங்கல் நினைவுகள்


கரைந்த காலத்தின்
எண்ணக் கரைசல்கள்,
கடற்கரையில் பொறுக்கிய
வெளுத்த பூமிகள்
என் பிஞ்சு கைகளில்...

தரையில் நடந்து
மனதில் மிதந்து,
நீந்தாக் கடலலைகளில்
சிக்கி மீண்ட
ஆனந்த மனச்சோர்வுடன்
உருண்டு புரளும் மணலில்
நான் கட்டி சரிந்த
மனக்கோட்டை;

அவற்றை நினைத்து
இன்னும் 'துடிக்கிறது'
என் முதிர்ந்த இதயம்,
கண்களிலிருந்து நீர்வீழ்ச்சி;
மாற்றுப்பாதையில்
அக்கடல்நீரே!
நான் உயிருடனிருப்பதன் சாட்சி.

No comments:

Post a Comment

Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.