கடலான கல்வி
கரை கடந்தது இன்று---
நிலத்திலும் வானிலும்,
அறிவு வெள்ளம்!
சாக்கடையாக சாதிகளும்,
கூவமாக மதங்களுமில்லாத
"உடனுழை" கற்றலின் எழுச்சி,
இணையத்தின் புரட்சி!!
காலம் காகிதங்களை
கிழித்தெறியலாம்,
காற்றில் பரவும் அழியா
அறிவுத்தொற்றுகளை?
மின்னல் வேகத்தில்
கல்வியின் எதிரொலி,
மின்னஞ்சலில் மின்சான்றிதலாக
புதிய உருவத்தில் சரஸ்வதி.
No comments:
Post a Comment
Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.