Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Wednesday, May 6, 2020

வாழ்க்கை ஒரு வெள்ளைத் தாள், உன் கையில் பேனா

வாழ்க்கை ஒரு வெள்ளைத் தாள், உன் கையில் பேனா


இறைவனின் கால புத்தகத்தில், ஒரு வெள்ளைத் தாளாக வாழ்க்கை;
அதில் அழியா சொற்களை பதிக்கும் பேனா, உன் விரல்களில் வசம்.
தன்னம்பிக்கையுடன் எதையும் சுயமாக எழுது, உன் ஆசான் இயற்கை;

இரத்த மையை ஊற்றி உயிரூட்டும் பேனா, மருத்துவரின் உயிர்நாடி;
முடிவு மையை ஊற்றி தீர்ப்பெழுதும் பேனா, நீதிபதியின் செங்கோல்.
தொழில்களைத் தேர்ந்தெடுப்பது அவரவர் பேனா(நா)வின் இயக்கமடி!

ஷேக்ஸ்பியர் மறைந்தாரா? ஜெயகாந்தன் இறந்தாரா? சொல்;
கிறுக்கப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே உயிர் பிழைத்து இவ்வுலகில் வாழும்.
பேனாவின் முனையால் வாழ்க்கையை செதுக்கு, சிற்பமாகுமது நம்பிச்செல்;

திறமையும் பிறப்பும் முரண்பாடு, கோட்பாடுகளை ஊடுருவிய விழிகள்;
வைகோட்ஸ்கியின் கருத்தைப் படி, நீ வைர வாளாக அவதரிப்பாய்!!
வாழ்க்கை வீட்டிற்கு ஜன்னல்களாக வறுமையின் பின்வரும் இன்னல்கள்;

எழுது, எழுது, எழுதிக்கொண்டேயிறு, நான் இங்கு எதுவும் எழுதவில்லை;
இவன் கடவுளாகிய எழுத்தாளர் அல்ல, நூல்களை அடுக்கும் நூலகர் தான்!!!
உன் தலையெழுத்தை நீயே எழுது, எழுத்துக்கள் உறைவதில்லை...

குறிப்பு:
இக்கவிதை நீலவிழிகள் காலாண்டிதழ் நடத்திய இணையவழி கவிதைப் போட்டியில் NVCS097 என்று எண்ணிட்டு அடுக்கப்பட்டது. (06/05/2020)

சான்றிதழ்:


நன்றி!!!

* * * * *

2 comments:

Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.